மின்னல் தாக்கி அக்கா, தங்கை பலி... ராமநாதபுரத்தில் சோகம்

பரமக்குடி அருகே வாழவந்தால்புரம் கிராமத்தில், பள்ளிக்கூடத்தில் விடுமுறை என்பதால், வேப்பங்கொட்டை சேகரிக்க சென்ற இரு சகோதரிகள் மின்னல் தாக்கி பலியாகினர்.

பரமக்குடி அருகே வாழவந்தால்புரம் கிராமத்தில், பள்ளிக்கூடத்தில் விடுமுறை என்பதால், வேப்பங்கொட்டை சேகரிக்க சென்ற இரு சகோதரிகள் மின்னல் தாக்கி பலியாகினர்.

author-image
WebDesk
New Update
death

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வாழவந்தால்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவரின் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13) மற்றும் சபிக்கா பானு (9). அஸ்பியா ஒன்பதாம் வகுப்பும், சபிக்கா ஐந்தாம் வகுப்பும் அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.

Advertisment

இன்று சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால், ஊருக்கு வெளியே உள்ள வேப்பமரத்தடியில் வேப்பங்கொட்டை சேகரிக்க தாயாருடன் இந்த இரு சிறுமிகளும் சென்றுள்ளனர். இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென மழை மேகங்கள் சூழ்ந்து கடுமையான இடி மின்னல் ஏற்பட்டது.

அப்போது, எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில், அக்காள் தங்கை என இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். தகவல் அறிந்த சத்திரக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இருவரின் உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் உயிர்கள் மின்னல் தாக்கி பலியான சம்பவம், உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராமத்தினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Ramanathapuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: