/tamil-ie/media/media_files/uploads/2017/06/5-1.jpg)
இலங்கை கடற்படையால் 22 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மீனவர்களைவிடுதலைசெய்யமத்தியமாநிலஅரசுகள்நடவடிக்கைஎடுக்கவலியுறுத்தியும்ராமேஸ்வரம்விசைப்படகுமீனவர்கள்இன்றுவேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
நடுக்கடலில் 3 விசைப்படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, 24ந் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ராமேசுவரம் துறைமுக பகுதியில் நேற்று நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூடத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மீன்பிடிக்க சென்று கைதான ராமேசுவரத்த சேர்ந்த 3 விசைப்படகுகளுடன் 22 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு படகு, 4 மீனவர்கள் உடனடியாக மீட்டுக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க இலங்கை அரசுடன் பேசிஉடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.