எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 61 மீனவர்கள் கைது - ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை முதல் தொடங்குகின்றனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை முதல் தொடங்குகின்றனர்.

author-image
WebDesk
New Update
Fishermen protest

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 55 நாட்களில் மட்டும் 61 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisment

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீனவ சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கைச் சிறைகளில் உள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

போராட்டங்களின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 13ஆம் தேதி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும், ஆகஸ்ட் 19ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர். இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படும் வரை ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

Fishermen Rameshwaram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: