ராமேசுவரம் மீனவர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தம்; ரூ.15 கோடி மீன் ஏற்றுமதி பாதிப்பு

மீனவர்கள் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் 7வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்; ரூ. 15 கோடி மீன் ஏற்றுமதி பாதிப்பு; செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் அறிவிப்பு

மீனவர்கள் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் 7வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்; ரூ. 15 கோடி மீன் ஏற்றுமதி பாதிப்பு; செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
rameshwaram

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 7-வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

கடந்த 9 ஆம் தேதி, டல்லஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 7 மீனவர்களுடன் கைது செய்தனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 64 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 24 மீனவர்கள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர்.

இந்தநிலையில், மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது. போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டமும், உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை 7-வது நாளாக நடைபெற்ற வேலைநிறுத்தத்தால், 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் மீன்பிடி துறையில் நங்கூரமிட்டிருந்தன. 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்ததால், ரூ.15 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

மேலும், நாளை (19 ஆம் தேதி) ராமேசுவரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Fishermen Rameshwaram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: