/tamil-ie/media/media_files/uploads/2023/08/srirangam-temple.png)
ராமேஸ்வரத்தில் ஆருத்ரா தரிசனம்
ராமே
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மூன்ஸ்வரத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று ஜனவரி 13 ராமேஸ்வரம் கோயில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டது.றாம் பிரகாரத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள சபாபதி சன்னதியில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதால் இன்று (ஜன.13) கோயில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டு 3 மணி முதல் 3:30 வரை ஸ்படிகலிங்க பூஜை, பின் திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது.
அதிகாலை 3 மணிக்கு சபாபதி சன்னதியில் ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று 4:15 மணிக்கு மாணிக்கவாசகர் புறப்பாடு நடைபெற்றது.
காலை 5:15 மணிக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு திருவிழா தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் ஸ்ரீநடராஜர் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா நடந்தது.
பிற்பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 7:30 மணிக்கு ஊஞ்சல் நலுங்கு வைபவத்தை தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.