/indian-express-tamil/media/media_files/PC8ukxcd93629yltJJO3.jpg)
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு இன்று (மார்ச் 12) முதல் கடைப்பிடிப்பதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
அதன்படி கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத் வல் ஜாமஅத் மஸ்ஜிது பள்ளிவாசலில் கோயம்புத்தூர் ஹிலால் கமிட்டியின் ரமலான் பிறை பார்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பிறை தென்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ரமலான் மாதம் நோன்பு தொடங்குவதாகவும், இன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறுவதுடன் சிறப்பு இறை வழிபாட்டில் ஒரு மாத காலத்திற்கு ஈடுபட போவதாகவும் ஹிலால் கமிட்டியில் தலைவர் அப்துர் ரஹீம் இம்தாதி தெரிவித்தார்.
செய்தி:பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.