ரமலான் சிறப்பு தொழுகை... ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவையில் ரமலான் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பதில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து தொழுதனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவையில் ரமலான் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பதில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து தொழுதனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரம்ஜான் தொழுகை

கோவையில் ரம்ஜான் பண்டிகையொட்டி இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டியின் சார்பில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Advertisment

ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமிய மக்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்த பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இந்த ஆண்டு ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டி சார்பில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

இந்த தொழுகையின் போது பெண்கள்,ஆண்கள் என ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நாளை கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

Ramzan Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: