ரன்வீர் ஷா அலுவலகத்தில் 500 ஆண்டுகள் பழமையான பெருமாள் வாகனங்கள் கண்டுபிடிப்பு

ரன்வீர் ஷா விரைவில் கைது செய்யப்படுவார் என சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி சுந்தரம் தகவல்

ரன்வீர் ஷா விரைவில் கைது செய்யப்படுவார் என சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி சுந்தரம் தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரன்வீர் ஷா அலுவலகத்தில் ரெய்டு, ரன்வீர் ஷா கிண்டி அலுவலகம்

ரன்வீர் ஷா அலுவலகத்தில் ரெய்டு

ரன்வீர் ஷா அலுவலகத்தில் ரெய்டு :  தொடர்ந்து பல மாதங்களாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் பல்வேறு முக்கியப் புள்ளிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் செய்து கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள், விக்ரகாரங்கள், தூண்கள் ஆகியவற்றை கண்டறிந்து வருகின்றனர்.

Advertisment

ரன்வீர் ஷா அலுவலகத்தில் ரெய்டு

ஷாவின் வீடு, மற்றும் அவரின் நண்பர்களின் வீடுகளைத் தொடர்ந்து, சென்னையில் இருக்கும் கிண்டி ரேஸ்கோர்ஸ்ஸில் அமைந்துள்ள அவரின் அலுவலகத்திலும் சோதனைகளை மேற்கொண்டனர் சிலைக் கடத்தல் தடுப்பு அதிகாரிகள்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  ரன்வீர் ஷா அலுவலகத்தில் நடத்தபட்ட ஆய்வில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் வாகனங்கள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment
Advertisements

மேலும் ரன்வீர் ஷாவை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் டி.எஸ்.பி சுந்தரம் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க : சிலைகளை மீட்பதற்கு மத்திய மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை - பொன். மாணிக்கவேல்

Pon Manikkavel

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: