scorecardresearch

தாம்பரத்தில் ரூ.535 கோடி பணத்துடன் பழுதான கண்டெய்னர் லாரி

ஒவ்வொரு லாரியிலும் ரூ.535 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

rbi container

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்த ரூ.1,070 கோடி மதிப்பிலான கரன்சிகள் நிரப்பப்பட்ட இரண்டு கண்டெய்னர் லாரிகள் புதன்கிழமை தொழில்நுட்பக் கோளாறால் தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டன.

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து 2 கன்டெய்னர் லாரிகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கு ரூபாய் நோட்டுகளை வழங்குவதற்காக புறப்பட்டன.

ஜி.எஸ்.டி., சாலையில் தாம்பரம் சானடோரியம் அருகே லாரிகள் வந்து கொண்டிருந்தபோது, ​​லாரி ஒன்றில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியது. வாகனத்தில் சென்ற போலீசார், புகை மூட்டத்தைக் கண்டு, இரு வாகனங்களையும் நிறுத்தி, பாதுகாப்பு காரணங்களுக்காக, தாம்பரத்தில் உள்ள, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து தாம்பரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீஸார் மருத்துவமனையின் கதவை அடைத்தனர். சிறிது நேரம் மருத்துவமனைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. மெக்கானிக்குகள் சிக்கலை சரி செய்யாததால், இரண்டு லாரிகளும் சிறிது நேரம் கழித்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு திரும்பின.

ஒவ்வொரு லாரியிலும் ரூ.535 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் இருந்ததாகவும், தேசிய நெடுஞ்சாலையில் 17 போலீசார் லாரிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rbi container lorry with over 1000 crores stranded in tambaram