வாகனப் பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவதும், வழங்குவதும் குற்றம் என புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. வாகன ஆர்.சி புத்தகத்தை வைத்து பணம் வழங்கப்படும் என புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில், போக்குவரத்து துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் போக்குவரத்து விதிகளுக்கு முரணாக, ஆர்.சி புத்தகத்தை அடமானம் வைத்து பணம் பெறுவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம் எனவும், அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“