மீட்பு வாகனம், குளிர்சாதன பெட்டிகள் வயநாட்டிற்கு அனுப்பி வைப்பு: கோவை மாவட்ட நிர்வாகம் உதவி

மீட்பு வாகனங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான குளிர் பெட்டிகள் ஆகியவற்றை கேரள மாநிலம் வயநாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மீட்பு வாகனங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான குளிர் பெட்டிகள் ஆகியவற்றை கேரள மாநிலம் வயநாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

author-image
WebDesk
New Update
help

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்திலிரிந்து மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர் பெட்டிகள் (Freezer Box) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Advertisment

help1

கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் இணைந்து இப்பணிகளை ஒருங்கிணைத்து நேற்று நள்ளிரவு மீட்பு வாகனங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான குளிர் பெட்டிகள் ஆகியவற்றை கேரள மாநிலம் வயநாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

help3

Advertisment
Advertisements

தொடர்ந்து நிவாரண பொருட்களை அனுப்புவதற்காக கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், கோவையில் உள்ள தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து பணிகளை துவங்கியுள்ளது.

செய்தி: பி.ரஹ்மான் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: