ரெட் அலர்ட்: அதி கனமழை - நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்துக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து சனிக்கிழமை (ஜூன் 14) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து சனிக்கிழமை (ஜூன் 14) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
weather news today chennai weather forecast tamilnadu rains chennai rain imd chennai report -

நீலகிரி மாவட்டத்திற்கு சனிக்கிழமை (ஜூன் 14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து சனிக்கிழமை (ஜூன் 14) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நீலகிரி மாவட்டத்திற்கு சனிக்கிழமை (ஜூன் 14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை (ஜூன் 14) விடுமுறை அறிவிப்புக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Nilgiris

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: