ரெட் அலர்ட்: கனமழையை எதிர்கொள்ள 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் - பேரிடர் மேலாண்மைத் துறை தீவிரம்

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மைத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மைத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
rain

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிடத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மைத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Advertisment

வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (11.06.20250 ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிடத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை அறிவித்துள்ளது.

Advertisment
Advertisements

ஜூன் 12, 2025: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிடத்தில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிடத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 13, 2025: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிடத்தில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிடத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 14, 2025: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிடத்தில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிடத்தில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிடத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 15, 2025: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிடத்தில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிடத்தில் கன முதல் மிக கனமழையும், தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிடத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 16, 2025: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிடத்தில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிடத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 17, 2025: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிடத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிடத்தில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிடத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தல்:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிக கனமழையை எதிர்கொள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பயன்படுத்தி, மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழையை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்க வேண்டும் என 7 மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamilnadu Weather

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: