/tamil-ie/media/media_files/uploads/2023/03/arrest-hand-cuff.jpg)
ஈரோட்டில் பாலியல் தொழில் செய்துவந்த 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இந்த்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் திடீரென சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த அழகிகளை மீட்டனர்.
அந்த 4 பெண்களும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களை மீட்ட போலீசார் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, மசாஜ் சென்டர் நிர்வாகி சிவா என்பவரை கைது செய்தனர். அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் விபச்சாரக் கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.