/indian-express-tamil/media/media_files/6nUi4SyJ8OIzpaiEGXtJ.jpg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அருகே 12 ஏக்கர் நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாவலூர் அருகே 12 ஏக்கர் நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளார். மேலும், அந்த இடத்தில் இலவச மருத்துவமனை கட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை அருகே திருப்போரூர் வட்டத்துக்கு உட்பட்ட நாவலுார் அருகே வாங்கிய நிலத்தை பத்திர பதிவு செய்ய, திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை வந்தார்.
திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பத்திரப்பதிவு செய்ய வருகிறார் என்பதால், பதிவுத்துறை உயர் அதிகாரிகள், சார் - பதிவாளர் மற்றும் ஊழியர்கள், வியாழக்கிழமை (29.02.2024) காலை 8:00 மணிக்கு அலுவலகம் வந்தனர்.
இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் காலை 9:45 மணிக்கு, தனது பாதுகாவலர்களுடன் வந்தார். அவருக்கு பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பத்திரப்பதிவு செய்ய வந்த மற்ற யாரையும், அலுவலகத்துக்கு உள்ளே அனுமதிக்கவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள நாவலுார், தாழம்பூர் பகுதியில், 12 ஏக்கர் இடம் வாங்கியுள்ளதாகவும், அந்த இடத்தை சார்ந்து, ஆறு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த இடத்தில் நடிகர் ரஜினிகாந்த் இலவச மருத்துவமனை கட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.