அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஆர்.என் ரவி ஏற்க வில்லை: ஆளுனர் மாளிகை அறிக்கை

நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை ஆளுனர் ஏற்கவில்லை என ராஜ்பவன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை ஆளுனர் ஏற்கவில்லை என ராஜ்பவன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
RN Ravi

ஆளுனர் ஆர்.என். ரவி

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Advertisment

இந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தொடர்ந்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரிடம் இருந்த பொறுப்புகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசுக்கும், முத்துசாமிக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறார். இது தொடர்பாக ஆளுனர் மாளிகை செய்திக் குறிப்பில், “நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை ஆளுனர் ஏற்றுக் கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V Senthil Balaji Governor Rn Ravi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: