Advertisment

ராமர் கோவில் திறப்பு; வீடுகளில் தீபம் ஏற்ற ஆளுநர் அழைப்பு!

ராமர் கோவில் திறப்பு தினத்தில் வீடுகளில் தீபம் ஏற்றுங்கள் என ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு விடுத்துள்ளார். ராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
Governor RN Ravi speech on Ramar in Trichy Tamil News

அயோத்தி ராமர் கோவில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அயோத்தி ராமர் கோவில் திறப்பு நாளில்,  "வீடுகள், குடியிருப்புகளில் தீபம் ஏற்றுங்கள்" என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து ராஜ்பவன் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "நமது தேசம் இப்போதெல்லாம் ராம பக்தியில் மூழ்கியுள்ளது. நமது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் மத்தியில் இதை நானே பார்த்து உணர்ந்திருக்கிறேன்.

'ஸ்ரீ ராமர்' பாரதத்தின் தேசிய அடையாளம். நாளை ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் பால ராமர் பிராண பிரதிஷ்டையுடன் தேசம் ஒரு அற்புதமான ராமர் கோயிலை பெறும்.

இந்த வரலாற்றுப் பொன்னாளை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். தமிழகத்தில் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment