/tamil-ie/media/media_files/uploads/2023/08/New-Project-4-1.jpg)
Coimbatore
பொள்ளாச்சி அருகே உள்ள மூட்டாம்பாளையத்தில் பிரகாஷ் என்பவர் சக்தி வேலவன் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது வேன் மூலம் சக்தி முருகன் திருமண மண்டபத்திற்கு உறவினர்கள் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். திருமணம் நிகழ்ச்சி முடிந்த பின் உறவினர்களை ஏற்றிக் கொண்டு மீண்டும் வேன் மூட்டாம் பாளையம் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென வேன் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை. பெண்கள் உட்பட 9 நபர்களுக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் யோகேஸ்வரி, உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.