/tamil-ie/media/media_files/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-16-at-2.22.00-PM.jpeg)
தமிழ்நாடு முழுவதும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கணக்கெடுப்பு பணிகள் முடிவு பெற்றதன் அடிப்படையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிர்வாகப் பொறியாளர் மூலம் முழுமையாக சரிபார்க்கப்பட்டது. மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் கோரிக்கையை நிறைவேற்ற 153.42 கோடி ரூபாய் செலவில் 35 பாலங்களும், 20.82 கோடி ரூபாய் செலவில் 13 சாலைகளும் அமைக்க முன்மொழியப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடப்பாண்டில் நபார்டு வங்கி உதவியுடன் 285 கிராமப் புற சாலைகள், 141 பாலங்களை கட்ட 781 கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, 781 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அரசாணையில், 30 கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்காகவும், 141 பாலங்கள் கட்டுவதற்காகவும் ரூ.525.14 கோடி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டது. இதையடுத்து, மொத்தமாக 520.68 கிமீ தொலைவுள்ள 285 சாலைகளுக்கு ரூ.285.20 கோடியும், 141 பாலங்கள் கட்டுவதற்கு ரூ. 595.88 கோடியும் தேவை என்பதை சுட்டிக்காட்டி தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கோரப்பட்டது.
இதில், ரூ.153.42 கோடி மதிப்பிலான 35 பாலங்கள், ரூ.20.82 கோடியில் மேம்படுத்தப்பட வேண்டிய 13 சாலைகள், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நபார்டு வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ், 285 கிராமப் புற சாலைகளை மேம்படுத்தவும், 141 பாலங்கள் கட்டவும் ரூ.781.09 கோடி ஒதுக்குவதற்கான நிதி அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.