கோர்ட்டுக்கு வந்த ராக்கெட் ராஜா: ஆலங்குளத்தில் போட்டி என அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் போட்டியிடப் போவதாக ராக்கெட் ராஜா அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் போட்டியிடப் போவதாக ராக்கெட் ராஜா அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rocket Raja appeared in court

பனங்காட்டுப் படை அமைப்பின் தலைவர் ராக்கெட் ராஜா

பனங்காட்டுப் படை என்ற கட்சியை தொடங்கி நடத்திவருபவர் ராக்கெட் ராஜா. இவர் வழக்கு ஒன்றில் ஆஜராக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு வந்தார்.

Advertisment

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நிலைப்பாட்டில் உள்ளேன்” என்றார்.

தொடர்ந்துப் பேசிய அவர், “தனது கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்காது என்றார். மேலும், “வழக்கு ஒன்றில் ஆஜராக வந்துள்ளேன். இந்த வழக்கை சட்டத்தின் மூலம் சந்தித்து வருகிறேன்.

வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்துள்ளேன். அதன்படி ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவேன்” என்றார்.

Advertisment
Advertisements

ராக்கெட் ராஜா வருகையையொட்டி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளத்தில் பனங்காட்டுப் படை வேட்பாளர் ஹரி நாடார் மூன்றாம் இடம் பிடித்தார்.
இவர் வாங்கிய வாக்குகள் திமுக வேட்பாளரின் தோால்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tirunelveli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: