/indian-express-tamil/media/media_files/pMa5sYpqqyo6FQ69r489.jpg)
சென்னையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் சைக்கோ சரண், போண்டா ராஜேஷ், தினேஷ் ஆகிய 3 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இந்த 3 பேர்களையும் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்த ரவுடிகளின் ஆதரவாளர்களான ரவுடிக் கும்பல், சைக்கோ சரண், போண்டா ராஜேஷ், தினேஷ் ஆகிய 3 ரவுடிகளையும் விடுவிக்கக் கோரி மருத்துவமனையை அடித்துநொறுக்கினர். இதில் மருத்துவ உபகரணங்கள், கண்ணாடிகள் ஆகியவை சேதமடைந்தது. மருத்துவமனையை ரவுடி கும்பல் அடித்து நொறுக்கியதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாக இருந்தது. மருத்துவமனையை அடித்து நொறுக்கிய பின்னர், ரவுடிக் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
கஞ்சா, கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவுடிகள் மருத்துவமனையை அடித்து நெருக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பையும் பொதுமக்கள் இடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, 3 ரவுடிகளையும் விடுவிக்கக் கோரி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.