மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் சம்பந்தப்பட்ட 2021ஆம் ஆண்டு கொலை வழக்கின் விசாரணைக்காக, விருதுநகர் கூடுதல் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜரானார். இந்த வழக்கில், வரும் ஜூலை 14ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக, 2023ஆம் ஆண்டு விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடக்கத்தில் விருதுநகர் நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
தற்போது இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 16) நடந்த விசாரணையின் போது, வரிச்சியூர் செல்வம், கிருஷ்ணகுமார், லோகேஸ், சதீஷ்குமார் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயக்குமார், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வரும் ஜூலை 14ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.