காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற என்கவுண்டரில் பிரபல ரவுடி விஷ்வா சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள கிளாய் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான விஷ்வா. ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில குற்ற வழக்குகளுக்காக ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில், தற்போது அவர் கையெழுத்திடாமல் தலைமை மறைவாக இருந்ததால் போலீசார் பிடிவாரண்டுடன் விஷ்வாவை தேடி வந்தனர். இந்த நிலையில், தான் விஷ்வா, சுங்குசார் சத்திரம் அருகே பதுங்கியிருப்பதை போலீசார் அறிந்தனர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து ஸ்ரீபெரும்புதூர் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது சோகண்டி அருகே வந்த போது போலீசாரை தாக்கிவிட்டு விஷ்வா தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த என்கவுண்டரில் ரவுடி விஷ்வா சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி விஷ்வாவின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் மற்றும் டி.ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ரவுடி விஷ்வா நடத்திய உதவி ஆய்வாளர் முரளி காயம் அடைந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“