ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட 3 வயது சிறுவன்... சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட மூன்று வயது சிறுவனை, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மீட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் அச்சிறுவனை ரயிலில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றது தெரியவந்தது.

தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட மூன்று வயது சிறுவனை, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மீட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் அச்சிறுவனை ரயிலில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றது தெரியவந்தது.

author-image
WebDesk
New Update
boy abonded

இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட மூன்று வயது சிறுவனை மீட்டு, அவரை அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisment

சனிக்கிழமை அன்று அதிகாலை 4.30 மணியளவில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி, பிளாட்ஃபார்மில் அழுதுகொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டார். அந்த அதிகாரியிடம் அச்சிறுவன் யார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படைக்கு தகவல் அளித்துள்ளார்.

ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற மின்சார ரயில் ஒன்று, அதிகாலை 4.20 மணியளவில் சானடோரியம் நிலையத்தில் நின்றபோது, ஒரு இளைஞன் அச்சிறுவனைக் கீழே இறக்கிவிட்டு ரயிலிலேயே தாம்பரம் நோக்கிச் சென்றது கண்டறியப்பட்டது.

இது கடத்தல் வழக்கா அல்லது குடும்பத் தகராறு காரணமாக கைவிடப்பட்டதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அச்சிறுவன் ஆலந்தூரிலுள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனை விட்டுச்சென்ற நபரை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையேயுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: