2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ₹11,313 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ₹4,179 கோடி அதிகமாகும்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் வெள்ளிக்கிழமை (பிப்.3) செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதிய வழித்தடங்கள் அமைப்பதற்கும், தடங்களை இரட்டிப்பாக்குவதற்கும், பாதையை புதுப்பிப்பதற்கும், பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டதில் பெரும் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் அவர், “₹1,158 கோடி ஒதுக்கீட்டில், திண்டிவனம்-நகரி, மதுரை-தூத்துக்குடி வழியாக அருப்புக்கோட்டை, மொரப்பூர்-தர்மபுரி, ராமேஸ்வரம்-தனுஷ்கோடி, ஈரோடு-பழனி மற்றும் திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை நீட்டிப்புகளில் புதிய பாதை திட்டங்களுக்கு ஊக்கம் கிடைக்கும்” என்றார்.
அந்த வகையில்,தெற்கு ரயில்வேயில் பாதை இரட்டிப்புக்காக ஒதுக்கப்பட்ட ₹1,565 கோடியில், திருவனந்தபுரம்-கன்னியாகுமரி கோட்டத்தில் மட்டும் ₹808 கோடியில் 16 இரட்டிப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மாநிலத்தின் பங்கு ₹1,321 கோடியாக இருக்கும்.
தொடர்ந்து, “அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 90 ரயில் நிலையங்கள் மேம்பாட்டிற்காக கண்டறியப்படும். இதற்கிடையில், “2022-23 நிதியாண்டில், தெற்கு ரயில்வே மொத்த வருவாயில் ₹8,100 கோடியைப் பதிவு செய்தபோது, 2021-22ல் அடைந்ததை விட 45.60% அதிகம்” என்பதையும் சிங் சுட்டிக் காட்டினார்.
இந்திய ரயில்வே 92% இலக்கை நிர்ணயித்திருந்த நிலையில், ரயில்கள் நேரத்துக்குச் செல்ல, தெற்கு ரயில்வே 93% இலக்கை எட்டியுள்ளது.
இதற்கிடையில், தெற்கு ரயில்வேயில் உள்ள 21 ரயில் நிலையங்களில் ஸ்டேஷன் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதாக அறிவிக்கப்பட்டு, ஒன்பது ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 8 நிலையங்கள் தொழில்நுட்ப ஆலோசகர்களை நியமிப்பதற்காக ரயில் நில மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/