சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த, ரூ.24,000 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையை மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை விரிவுபடுத்துவதற்காக, ரூ.24,000 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதைப்பற்றி, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பாலங்கள், சுரங்கங்களுடன் பிரிக்கப்பட்ட நான்கு வழிச் சாலையாக அமைக்கப்படவுள்ளது.
8 பிரிவாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil