/tamil-ie/media/media_files/uploads/2022/03/arrest.jpg)
Rs 45 crore bank fraud case CBI arrests Chennai Port Trust official
இந்தியன் வங்கிக்கு ₹45.40 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய சிபிடியின் ஃபிக்ஸட் டெபாசிட்களை (CPT’s fixed deposits) முன்கூட்டியே மூடிய மோசடி தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில், சென்னை துறைமுக அறக்கட்டளை அதிகாரி ஒருவரை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
பிக்சட் டெபாசிட்களை முன்கூட்டியே மூடிவிட்டு மோசடி செய்தது தொடர்பாக உதவி கண்காணிப்பாளர் ரகு பெர்னார்டை புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். குற்றவாளி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
ஜூலை 31, 2020 அன்று இந்தியன் வங்கி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இரண்டு வெளிநாட்டினர் உட்பட 17 பேரை ஏஜென்சி கைது செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.