சென்னையை சேர்ந்தவர் வங்கி கணக்கில் ரூ. 9000 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கியிடம் இருந்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதால், இவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார். இவர் கோடம்பாக்கத்தில் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 9ம் தேதி இவரது வங்கிக் கணக்கிற்கு ரூ. 9000 கோடி டெப்பாசிட் செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது.
முதலில் இதை ராஜ்குமார் விளையாட்டாக யாரோ அனுப்பி இருப்பார்கள் என்று நினைத்துள்ளார். ஆனால் மீண்டும் அந்த செய்தியை பார்த்த ராஜ்குமார், தனது நண்பருக்கு ரூ. 21,000 அனுப்பி உள்ளார். இந்நிலையில் இந்த பணம் அவரது வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ’இந்நிலையில் இது தொடர்பாக வங்கியிடம் கேட்டபோது, அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவகத்தில் அவர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பணம் டெபாசிட் செய்யப்பட்ட 25 நிமிடங்களில், இவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“