Advertisment

தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ908 கோடி அபராதம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கில் ரூ.908 கோடி அபராதம்: ரூ89 கோடி சொத்துக்கள் பறிமுதல்; அமலாக்கத்துறை நடவடிக்கை

author-image
WebDesk
New Update
jagathratchakan

தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன்

தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான அந்நியச் செலாவணி விதிகளை மீறிய வழக்கில் ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Rs 908-crore penalty in FEMA case against DMK MP S Jagathratchakan: ED

2020 செப்டம்பரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், ஆகஸ்ட் 26 அன்று அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பின் உத்தரவைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

76 வயதான ஜெகத்ரட்சகன், அரக்கோணம் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

எம்.பி., தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய இந்திய நிறுவனத்திற்கு எதிராக ஃபெமா விசாரணை தொடங்கப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியது.

இந்த விசாரணையில், எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கு ஃபெமா சட்டத்தின் 37A பிரிவின் கீழ் செப்டம்பர் 11, 2020 தேதியிட்ட பறிமுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு 89.19 கோடி.

"ஃபெமா சட்டத்தின் 37A பிரிவின்படி பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் 26/08/2024 தேதியிட்ட தீர்ப்பின்படி ரூ. 908 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது" என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dmk S Jagathratchagan ED
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment