Advertisment

ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உள்துறை செயலர், டி.ஜி.பி-க்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவதிப்பு வழக்கில், தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
Nov 01, 2023 19:33 IST
New Update
ss

ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உள்துறை செயலர், டி.ஜி.பி-க்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவதிப்பு வழக்கில், தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நாட்டின் 76-வது சுதந்திர தினம், அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, அக்டோபர் 22 மற்றும் 29 தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், நிபந்தனையுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு அக்டோபர் 16-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (நவம்பர் 1) விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதி வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது எந்தவொரு தடை உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் இந்த மனு மீது வாதிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

தமிழக காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது, அந்த மேல்முறையீட்டு மனு நாளை மறுநாள் (நவம்பர் 3) விசாரணைக்கு வர இருக்கிறது என்று தெரிவித்தார். 

இதையடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காதது அரசினுடைய நிர்வாகத் திறமையின்மையைக் வெளிக்காட்டுவதாகவும்  நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த இந்த அரசு விரும்பவில்லை என்பதைக் காட்டுவதாகவும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி இந்த மனு குறித்து 4 வாரங்களுக்குள் தமிழக உள்துறைச் செயலர், டி.ஜி.பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Rss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment