ஆர்.டி.ஓ., மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: நாமக்கல் அருகே சோகம்

நாமக்கல் அருகே வகுரம்பட்டியில் அதிகாலை 5 மணி அளவில், கணவன்-மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் அருகே வகுரம்பட்டியில் அதிகாலை 5 மணி அளவில், கணவன்-மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
rto commits suicidct

ஆர்.டி.ஓ., மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: நாமக்கல் அருகே சோகம்

நாமக்கல் தில்லைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(54). இவர் திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்தார். சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய இவர் 6 மாதங்களுக்கு முன் இடமாறுதல் மூலம் திருச்சி சென்றார்.

Advertisment

திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றிய சுப்பிரமணி மற்றும் ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய பிரமிளா இருவரும் இன்று அதிகாலை வகுரம்பட்டி பகுதியில் ரயில் முன்பு விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டனர். இருவரது உடல்களைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 

முதற்கட்ட விசாரணையில், இவர்களது மகள் திருமணத்தில் பெற்றோருக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அவர், திருமணம் வேறு ஒருவரை செய்ய முடிவு எடுத்துள்ளதால் இருவரும் இந்த விபரீத முடிவு எடுத்ததாகத் தகவல் கூறப்படுகிறது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Advertisment
Advertisements

செய்தி: க.சண்முகவடிவேல்

Namakkal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: