Advertisment

சென்னை சிறுமி மரணம்: ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு

அதிமுக நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில் மயங்கிவிழுந்த சிறுமி உயிரிழந்த நிலையில், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Villupuram minor girl dies after burning with petrol, aiadmk councillor arrested, admk functionaries

சென்னை சிறுமி யுவஸ்ரீ உயிரிழப்பு குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதங்களை சந்தித்தன. இந்த நிலையில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் டிச.9ஆம் தேதி சனிக்கிழமை வழங்கப்பட்டன.

அப்போது, ஆர்.கே. நகர் கலைஞர் நகரில் வசிக்கும் துப்புரவு பணியாளர் வேலு என்பவரின் 9வது படிக்கும் மகள் யுவஸ்ரீ என்பவர் மயங்கி விழுந்தார்.

Advertisment

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி யுவஸ்ரீ உயிரிழந்தார்.

இந்த நிலையில் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கையில், “சிறுமி மிதிபட்டோ அல்லது மூச்சு திணறியோ உயிரிழக்கவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment