Advertisment

Russia Ukraine Crisis : உக்ரைன் பிரச்னை: ரஷ்யாவின் அண்டை நாடுகள் பதட்டத்தை அதிகரிக்கக் கூடாது - புதின் எச்சரிக்கை

Russia Ukraine war, Zaporizhzhia nuclear power plant attack latest news 04 March 2022 ரஷ்யா-உக்ரைன் போர் குறித்த அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Russia Ukraine Crisis : உக்ரைன் பிரச்னை: ரஷ்யாவின் அண்டை நாடுகள் பதட்டத்தை அதிகரிக்கக் கூடாது - புதின் எச்சரிக்கை

Ukraine News: உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜ்ஜியா மீது’ ரஷ்ய ராணுவம் அனைத்து பகுதிகளிலும் தாக்குவதால் அபாயம் நிலவுகிறது. அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் விபத்தை விட 10 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். அணுமின் நிலையத்தில் தாக்குதலை நிறுத்த ரஷ்யாவிற்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது- உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தகவல்!

Advertisment

உக்ரைனில் உள்ள ரஷ்ய குடிமக்களின் சொத்துக்களை முடக்கம்!

உக்ரைனில் உள்ள ரஷ்ய குடிமக்களின் சொத்துக்களை முடக்கும் சட்டத்திற்கு உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக மாணவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு சார்பில் சிறப்பு குழு!

தமிழக மாணவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவிற்கு விரைந்து அனுமதி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 193 மாணவர்கள் மட்டுமே தாய்நாடு திரும்பி உள்ளனர். உக்ரைனில் இருந்து அழைத்துவரப்படும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தனிக் கவனம் செலுத்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Ukraine News Live Updates

உக்ரைன் – ரஷ்யா.. விரைவில் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

பெலாரசில், உக்ரைன் - ரஷ்யா இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக சூழல் எட்டப்படாத நிலையில், 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிருப்தி. உடன்பாடு எட்டப்படாததால் விரைவில் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்

ரஷ்யா பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 35%ஆக நிர்ணயம்!

ரஷ்யா மற்றும் பெலாரஸ் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 35%ஆக நிர்ணயித்து கனடா அரசு அறிவித்துள்ளது.

செர்னிஹிவ் நகரின் மீது தாக்குதல்.. 9 பேர் உயிரிழப்பு!

உக்ரைனின் வடக்கு பகுதி நகரமான செர்னிஹிவ் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக செர்னிஹிவ் கவர்னர் தகவல்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:55 (IST) 04 Mar 2022
    உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நாம் காணாத அழிவு

    நேட்டோ நாடுகளின் விமானங்கள் உக்ரைன் மீது பறக்க தடை விதிக்கப்பட்டுளள்ளது. அத்தகைய நடவடிக்கை ஐரோப்பாவில் அணுசக்தி ரஷ்யாவுடன் பரவலான போரைத் தூண்டும் என்று எச்சரித்தது, அமைப்பின் உயர்மட்ட சிவிலியன் அதிகாரி கூறினார்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் “உக்ரைனில் இப்போது நடப்பது பயங்கரமானது. இது வேதனையானது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நாம் காணாத அளவில் அழிவைக் காண்கிறோம், ”என்று அவர் கூறினார்.



  • 22:52 (IST) 04 Mar 2022
    உக்ரைன் போரை நிறுத்த தேவையான அனைத்தையும் செய்ய அமெரிக்கா தயார்

    உக்ரைனில் போரை நிறுத்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்ய வாஷிங்டன் உறுதியாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளின்கன் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான சந்திப்பிற்குச் சென்றபோது, ​​ரஷ்யாவிற்கு எதிராக எடுத்த தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்தார்..

    "ஜனாதிபதி புடினின் விருப்பப் போரை நாங்கள் ஒன்றாக எதிர்கொள்கிறோம்: தூண்டப்படாத, நியாயமற்ற மற்றும் உண்மையான மக்களுக்கு பயங்கரமான, கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு போர். தாய்மார்கள், தந்தைகள். குழந்தைகளுக்காகவாது போரை நிறுத்த வேண்டும்," என்று அவர் பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களிடம் கூறினார்.



  • 19:36 (IST) 04 Mar 2022
    உக்ரைனுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கும் 16 விமானங்கள் இயக்க இந்திய திட்டம்

    அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்திய விமானப்படையின் சி-17 விமானம் உட்பட 16 விமானங்கள் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் குறிப்பாக கார்கிவ் மற்றும் பிசோச்சின் மீது அரசாங்கத்தின் மிக உயர்ந்த கவனம் உள்ளது என்றும் கூறியுள்ளது.



  • 19:36 (IST) 04 Mar 2022
    உக்ரைனில் கிளஸ்டர் குண்டுகளை வீசும் ரஷ்யா - நோட்டோ தலைவர்

    ரஷ்யா உக்ரைனில் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்துகிறது என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார். பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யா 'கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவதை நாங்கள் பார்த்துள்ளோம், மேலும் சர்வதேச சட்டத்தை மீறும் பிற வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம் என்று கூறியுள்ளார்.



  • 19:30 (IST) 04 Mar 2022
    உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்கள்

    உக்ரைன் மீதான் ரஷ்யாவின் தாக்குதல் ஒன்பதாவது நாளாக அதிகரித்து வரும் நிலையில், இந்த தாக்குதலுக்கு தாக்குதலாக, ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் கூறப்படும் நிலையில், உக்ரைனில் இருந்து சுமார் 1 மில்லியன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த போர் காரணமாக ரஷ்யாவுக்கு உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளதால், அங்கு மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.



  • 17:39 (IST) 04 Mar 2022
    உக்ரைன் பிரச்னை: ரஷ்யாவின் அண்டை நாடுகள் பதட்டத்தை அதிகரிக்கக் கூடாது - புதின் எச்சரிக்கை

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் பிரச்னை தொடர்பாக பதட்டங்களை அதிகரிக்க வேண்டாம் என்று அண்டை நாடுகளை வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார். “எங்கள் அண்டை நாடுகள் மீது எந்த கெட்ட எண்ணமும் இல்லை. மேலும் நிலைமையை அதிகரிக்க வேண்டாம். எந்த கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்த வேண்டாம் என்றும் நான் அவர்களுக்கு அறிவுறுத்துகிறேன். நாங்கள் எங்கள் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுகிறோம், அவற்றை தொடர்ந்து நிறைவேற்றுவோம்” என்று புதின் தொலைக்காட்சியில் கூறினார்.

    ரஷ்ய அதிபர் புதின் மேலும் கூறுகையில், “எங்கள் உறவுகளை மோசமாக்கவோ அல்லது மோசமாக்கவோ இங்கு எந்த தேவையும் இல்லை. எங்கள் எல்லா செயல்களும், எழுமானால், அவை எப்போதும் சில நட்பு இல்லாத செயல்கள், ரஷ்ய கூட்டமைப்பிற்கு எதிரான செயல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மட்டுமே எழுகின்றன.” என்று புதின் தெரிவித்துள்ளார்.



  • 17:34 (IST) 04 Mar 2022
    அணு உலை மீது ரஷ்யா தாக்குதல்: 3 உக்ரைன் ராணுவத்தினர் பலி; 2 பேர் காயம்

    உக்ரைன் அணு உலை மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அரசு அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தில் ரஷ்ய தாக்குதலில் மூன்று உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாகவும் இருவர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அரசின் அணுசக்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோஸ்ஸி கூறுகையில், வெடித்த தீ விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.



  • 17:30 (IST) 04 Mar 2022
    ரஷ்யா-உக்ரைன் மீது விசாரணைக் குழு: ஐ.நா மனித உரிமைகள் ஆணைய வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

    உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக, சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழுவை அவசரமாக அமைக்க முடிவு செய்த ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் வாக்கெடுப்பில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களிக்கவில்லை.

    47 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில் உக்ரைனில் மனித உரிமைகள் நிலைமை குறித்த வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்களித்தது. இந்த தீர்மானம் 32 ஆதரவு வாக்குகளையும் இரண்டு (ரஷ்யா மற்றும் எரித்திரியா) எதிராகவும், இந்தியா, சீனா, பாகிஸ்தான், சூடான் மற்றும் வெனிசுலா உட்பட 13 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஆதரவாக வாக்களித்த நாடுகளில் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.

    “உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக மனித உரிமைகள் கவுன்சில் அவசரமாக ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தை நிறுவ முடிவு செய்துள்ளது” என்று கவுன்சில் ட்வீட் செய்தது. 15 நாடுகள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் தொடர்பான இரண்டு தீர்மானங்களையும் 193-இல் ஒரு தீர்மானத்தையும் இந்தியா புறக்கணித்துள்ளது.



  • 17:27 (IST) 04 Mar 2022
    ரஷ்யா-உக்ரைன் மீது விசாரணைக் குழு: ஐ.நா மனித உரிமைகள் ஆணைய வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

    உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக, சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழுவை அவசரமாக அமைக்க முடிவு செய்த ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் வாக்கெடுப்பில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களிக்கவில்லை.

    47 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில் உக்ரைனில் மனித உரிமைகள் நிலைமை குறித்த வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்களித்தது. இந்த தீர்மானம் 32 ஆதரவு வாக்குகளையும் இரண்டு (ரஷ்யா மற்றும் எரித்திரியா) எதிராகவும், இந்தியா, சீனா, பாகிஸ்தான், சூடான் மற்றும் வெனிசுலா உட்பட 13 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஆதரவாக வாக்களித்த நாடுகளில் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.

    “உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக மனித உரிமைகள் கவுன்சில் அவசரமாக ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தை நிறுவ முடிவு செய்துள்ளது” என்று கவுன்சில் ட்வீட் செய்தது. 15 நாடுகள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் தொடர்பான இரண்டு தீர்மானங்களையும் 193-இல் ஒரு தீர்மானத்தையும் இந்தியா புறக்கணித்துள்ளது.



  • 16:43 (IST) 04 Mar 2022
    அணுமின் நிலைய தாத்குதல் - 3 உக்ரைன் வீரர்கள் பலி

    அணுமின் நிலையத்தின் மீதான ரஷ்ய தாக்குதலில் 3 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 16:06 (IST) 04 Mar 2022
    தமிழக சிறப்பு குழு நாளை ஆலோசனை

    உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க அமைக்கப்பட்ட தமிழக சிறப்பு குழு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளது.



  • 15:59 (IST) 04 Mar 2022
    நாகர்கோவில் துணை மேயராக மேரி பிரின்சி வெற்றி

    நாகர்கோவில் மாநகராட்சியின் துணை மேயராக திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார்.



  • 15:24 (IST) 04 Mar 2022
    பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - 30 பேர் பலி

    பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள மசூதியில் தொழுகையின்போது வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.



  • 15:15 (IST) 04 Mar 2022
    "கூட்டணி அறத்தை காக்க வேண்டும்" - ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை

    முதலமைச்சரின் ஆணையை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்' காத்திட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 15:11 (IST) 04 Mar 2022
    சப்ரோசியா அணுமின் நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யா

    ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சப்ரோசியா அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.



  • 14:57 (IST) 04 Mar 2022
    திருவாரூரில் திமுக!

    திருவாரூரில் பேரூராட்சி, நகராட்சி மன்ற தலைமை பதவிகளை முழுமையாக திமுக கைப்பற்றியது.



  • 14:43 (IST) 04 Mar 2022
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு: அதிமுகவினர் நீக்கம்

    தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி மன்றத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த வார்டு உறுப்பினர்கள் அதிமுகவில் இருந்து நீக்கி கட்சி தலைமை

    நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 14:42 (IST) 04 Mar 2022
    கரூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயர்!

    கரூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக திமுகவின் கவிதா தேர்வு செய்யப்பட்டார். கவிதாவுக்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.



  • 14:41 (IST) 04 Mar 2022
    தென் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப் பயணம்

    தென் மாவட்டங்களுக்கு சசிகலா சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நெல்லை சென்ற சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



  • 14:13 (IST) 04 Mar 2022
    சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:57 (IST) 04 Mar 2022
    சொகுசுக் கப்பலை தாங்கள் கைப்பற்றவில்லை: ஜெர்மனி

    ரஷ்ய கோடீஸ்வரரின் சொகுசுக் கப்பலை தாங்கள் கைப்பற்றவில்லை என ஜெர்மனி விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யா மீது ஜெர்மனி பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய கோடீஸ்வரரின் சொகுசு கப்பலை கைப்பற்றியதாக தகவல் வெளியானது.



  • 13:43 (IST) 04 Mar 2022
    கடலூர் மாநகராட்சியின் முதல் மேயர்!

    கடலூர் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவின் சுந்தரி பதவியேற்கிறார்.



  • 13:42 (IST) 04 Mar 2022
    100-ஆவது டெஸ்டில் கோலி சாதனை!

    100-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோலி டெஸ்டில் 8000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.



  • 13:27 (IST) 04 Mar 2022
    வெளிநாட்டினவரை மீட்க பேருந்துகள்: ரஷ்யா தகவல்

    உக்ரைனில் போர்க்களத்தில் சிக்கியுள்ள வெளிநாட்டினவரை மீட்க பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது.



  • 13:27 (IST) 04 Mar 2022
    வெளிநாட்டினவரை மீட்க பேருந்துகள்: ரஷ்யா தகவல்

    உக்ரைனில் போர்க்களத்தில் சிக்கியுள்ள வெளிநாட்டினவரை மீட்க பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது.



  • 13:23 (IST) 04 Mar 2022
    போட்டி வேட்பாளர்கள் வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    திமுக கூட்டணியில், போட்டி வேட்பாளர்கள் வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் உள்ளனர்.



  • 13:13 (IST) 04 Mar 2022
    நெல்லை: திமுக வேட்பாளர் சித்ரா வெற்றி

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார்.



  • 12:50 (IST) 04 Mar 2022
    ஒசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி

    திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாராயணன் 18 வாக்குகளைப் பெற்ற நிலையில் சத்யா 27 வாக்குகள் பெற்று வெற்றி



  • 12:48 (IST) 04 Mar 2022
    கும்பகோணம் மேயராக தேர்வானார் ஆட்டோ ஓட்டுநர் சரவணன்

    ஆட்டோ ஓட்டுநர் சரவணன் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணித்த நிலையில் சரவணன் கும்பகோணம் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



  • 12:28 (IST) 04 Mar 2022
    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 12:00 (IST) 04 Mar 2022
    ஜபோரிஜ்ஜியா பாதுகாப்பாக உள்ளது - உக்ரைன்

    உக்ரைனில் அமைந்திருக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜ்ஜியா மீது ரஷ்யா வெடிகுண்டுகள் வீசிய நிலையில் தற்போது அந்த அணுமின் நிலையத்தின் மீது எத்தகைய பாதிப்பும் இல்லை என்று உக்ரைன் அறிவித்துள்ளது.



  • 11:57 (IST) 04 Mar 2022
    ஓசூர் மாநகராட்சி மேயர்

    ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றுள்ளார். மறைமுக தேர்தலில் சத்யா 27 வாக்குகளும், அதிமுகவின் பால நாராயணன் 18 வாக்குகளும் பெற்றனர்.



  • 11:55 (IST) 04 Mar 2022
    100வது டெஸ்ட் போட்டியில் விராட் - கெளரவித்த பிசிசிஐ

    இன்று தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அவருக்கு 100 என்று பொறிக்கப்பட்ட தொப்பியை நினைவு பரிசாக வழங்கினார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்



  • 11:35 (IST) 04 Mar 2022
    தஞ்சாவூர் மாநகராட்சி மேயர்

    தஞ்சையின் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த வேட்பாளர் ராமநாதன் வெற்றி பெற்றுள்ளார்



  • 11:34 (IST) 04 Mar 2022
    மதுரை மேயராக திமுகவின் இந்திராணி தேர்வு

    மதுரை மேயராக திமுகவின் இந்திராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



  • 11:28 (IST) 04 Mar 2022
    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ் வெற்றி

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மகேஷ் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து வேட்புமனு தாக்குதல் செய்த பாஜக வேட்பாளர் மீனா தேவ் தோல்வி அடைந்துள்ளனர்.



  • 11:25 (IST) 04 Mar 2022
    கடலூர் மேயராக திமுகவை சேர்ந்த சுந்தரி தேர்வு

    கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கீதா குணசேகரன் தோல்வி.



  • 10:54 (IST) 04 Mar 2022
    மேயர் சீட்டை அலங்கரிக்கும் திமுக!

    திருச்சி மேயராக திமுகவின் அன்பழகன், சேலம் மேயராக திமுகவின் இராமச்சந்திரன், திருப்பூர் மேயராக திமுகவின் தினேஷ்குமார், ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவின் உதயகுமார், கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக காங்கிரஸைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.



  • 10:54 (IST) 04 Mar 2022
    நாகர்கோவில் மேயர்.. திமுக, பாஜக போட்டி!

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வழக்கறிஞர் மகேஷ், பாஜக சார்பில் மீனாதேவ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.



  • 10:47 (IST) 04 Mar 2022
    அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவி.. திமுக-அதிமுக மோதல்!

    புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.



  • 10:47 (IST) 04 Mar 2022
    மேயர் பதவிக்கு போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்கள்!

    திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக திமுக வேட்பாளர் இளமதி, மதுரை மாநகராட்சியின் மேயராக திமுக வேட்பாளர் இந்திராணி, தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி, கோவை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்!



  • 10:46 (IST) 04 Mar 2022
    சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவியேற்றார்!

    சென்னை மாநகராட்சி மேயராக முதுகலை பட்டதாரி பிரியா(28) பதவியேற்றார். அவருக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்



  • 10:46 (IST) 04 Mar 2022
    இன்னும் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும்!

    சென்னைக்கு தென் கிழக்கில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 09:41 (IST) 04 Mar 2022
    ஆவின் பொருட்கள் விலை இன்று முதல் உயர்கிறது!

    தமிழக அரசின் ஆவின் பொருட்களான நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது.



  • 09:40 (IST) 04 Mar 2022
    சிபிஎம் கட்சி வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், நகர மன்றத் துணைத் தலைவராக போட்டியிடும், சிபிஎம் கட்சி வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 09:40 (IST) 04 Mar 2022
    சென்னை மாநகராட்சி மேயர்.. பிரியா ரிப்பன் மாளிகை வருகை!

    சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பாக போட்டியிடும் பிரியா, மனுத்தாக்கல் செய்ய ரிப்பன் மாளிகை வருகை தந்துள்ளார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்.எல்.ஏ-க்களும் வருகை தந்துள்ளனர்.



  • 09:39 (IST) 04 Mar 2022
    6,396 பேருக்கு கொரோனா!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 201 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • 09:39 (IST) 04 Mar 2022
    TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் இன்று தொடங்கியது!

    TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நிலை தேர்வில் வென்ற 3,800 பேர் எழுத உள்ளனர். 66 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.



  • 09:39 (IST) 04 Mar 2022
    தேனி மாவட்ட அதிமுக செயல் வீரர் கூட்டம் ரத்து!

    அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை இணைக்க சில நிர்வாகிகள் ஒ.பி.எஸ்-இடம் கோரிக்கை விடுத்த நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து’ ஆலோசிக்க நாளை நடக்கவிருந்த தேனி மாவட்ட அதிமுக செயல் வீரர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • 09:38 (IST) 04 Mar 2022
    மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு!

    பள்ளிகளில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை அமர வைப்பது அடிப்படை கல்வி உரிமையை மறுப்பதாகும். பெற்றோர்களை அவமதிக்கும் வகையில் செயல்படக் கூடாது. புகார் வரும் பள்ளிகள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • 09:38 (IST) 04 Mar 2022
    அய்யா வைகுண்டர் 190வது அவதார தின விழா!

    சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் 190வது அவதார தின விழாவையொட்டி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்ப்பட்டுள்ளது.



  • 08:36 (IST) 04 Mar 2022
    ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது!

    ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் உடன் நாளை மறுநாள் மோதுகிறது.



  • 08:35 (IST) 04 Mar 2022
    இன்று 1,298 பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல்!

    தமிழகத்தில் 21 மேயர்கள், துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், 490 பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் என மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.



  • 08:35 (IST) 04 Mar 2022
    இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி!

    இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா முதன் முறையாக களமிறங்க உள்ளார். விராட் கோலிக்கு இது 100வது டெஸ்ட் போட்டி. முதல் டெஸ்ட் போட்டியை காண மைதானத்தில் 50% ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.



  • 08:34 (IST) 04 Mar 2022
    ஐரோப்பிய யூனியனில் மேலும் 2 நாடுகள்? ரஷ்யா அதிர்ச்சி

    உக்ரைனை தொடர்ந்து அண்டை நாடுகளான மால்டோவா மற்றும் ஜார்ஜியா நாடுகளும், ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இணைய விண்ணப்பம் கொடுத்ததால் ரஷ்யா அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 08:33 (IST) 04 Mar 2022
    விமான எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்!

    ரஷ்யா - உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விமான எரிபொருளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. டெல்லியில் தற்போது ஒரு கிலோ லிட்டர் பெட்ரோல் ரூ.93,530 ஆக உள்ளது. இது பிப்ரவரி மாத விலையை விட இது 9% அதிகம்!



  • 08:33 (IST) 04 Mar 2022
    மேலும் 7,400 இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

    உக்ரைனில் உள்ள மேலும் 7,400 இந்தியர்கள் அடுத்த 2 நாட்களில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • 08:32 (IST) 04 Mar 2022
    ரஷ்யாவில் சமூக வலைதளங்கள் முடக்கம்!

    உக்ரைன் போருக்கு எதிரான கருத்துகள் எழுவதால், ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பல இடங்களில் முடக்கி ரஷ்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது!



  • 08:32 (IST) 04 Mar 2022
    உக்ரைன் மக்களுக்கு தற்காலிக பாதுகாப்பு!

    உக்ரைன் மக்களுக்கு அடுத்த 18 மாதங்களுக்கு தற்காலிக பாதுகாப்பு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.



  • 08:32 (IST) 04 Mar 2022
    உக்ரைன் வான்வெளியை மூட வேண்டும்!

    உக்ரைன் வான்வெளியை நேட்டோ அமைப்பு மூட வேண்டும். முடியாவிட்டால் உக்ரைனுக்கு விமானங்களை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 08:31 (IST) 04 Mar 2022
    மேலும் 210 இந்தியர்கள் இன்று டெல்லி வந்தடைந்தனர்!

    ருமேனியாவில் இருந்து சி17 ரக போர் விமானம் மூலம் மேலும் 210 இந்தியர்கள் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தனர். அவர்களை பாதுகாப்பு துறை இணை அதிகாரி அஜய் பட் வரவேற்றார்.



  • 08:31 (IST) 04 Mar 2022
    அவல நிலைக்கு உக்ரைன் அரசு தான் காரணம்!

    உக்ரைனிலிருந்து பொதுமக்களை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் பொதுமக்கள் அனுபவிக்கும் அவல நிலைக்கு உக்ரைன் அரசு தான் காரணம் என ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டியுள்ளது.



  • 08:30 (IST) 04 Mar 2022
    தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை கேள்வி?

    அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் ஒரே நாடு இந்தியாதான். மத்திய அரசு மூத்த அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மீட்பு பணிக்கு அனுப்பியுள்ள நிலையில் சிறப்பு குழுவின் தேவை என்ன? என தமிழ்நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 08:30 (IST) 04 Mar 2022
    ஜனதா தளம் ஆட்சி அமைத்தால், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்!

    2023 சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தால் நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்!



Tamilnadu Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment