New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/train1.jpg)
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்
சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் இருந்து கேரளாவின் கோட்டயத்திற்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 17 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அது முதல் நாள்தோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. விரதம் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக கோவிலில் குவிந்து வருகின்றனர்.
பேருந்துகள், தனியார் வாகனங்களில் வரும் பக்தர்கள் தவிர, ரயில்களில் சபரிமலை செல்லும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோட்டயத்துக்கு இன்று முதல் 7 வாராந்திர சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இன்று (19 ஆம் தேதி), வருகிற 26 ஆம் தேதி, டிசம்பர் 3 ஆம் தேதி, 10 ஆம் தேதி, 17 ஆம் தேதி, 24 ஆம் தேதி, 31 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் (வண்டி எண்: 06027) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடையும். இந்த ரயில்கள் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக கோட்டயம் செல்லும்.
இதேபோல கோட்டயத்தில் இருந்து வருகிற 20 ஆம் தேதி, 27 ஆம் தேதி, டிசம்பர் 4 ஆம் தேதி, 11 ஆம் தேதி, 18 ஆம் தேதி, 25 ஆம் தேதி, மற்றும் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் (வண்டி எண்: 06028) இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.
இந்தநிலையில், இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.