New Update
![Vande bharat](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/aL1Te6yltWQB5hE4cD5R.jpg)
Sabarimala Special Vande Bharat services
Sabarimala Special Vande Bharat services
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வெள்ளிக்கிழமை (டிச.15) முதல் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - கோட்டயம் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் டிச.15, 17, 22, 24 தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் (எண்: 06151) மாலை 4.15 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.
மறுமார்க்கமாக கோட்டயத்தில் இருந்து டிச.16, 18, 23, 25 தேதிகளில் அதிகாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் (எண்: 06152) மாலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் பெரம்பூா், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் வழியாக இயக்கப்படும்.
இதுபோல் காச்சிக்கூடா - கொல்லம் இடையே டிச.18 முதல் ஜன.15-ஆம் தேதி வரை திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07109) இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கமாக டிச.20 முதல் ஜன.17-ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07110) இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டுக்கு வியாழக்கிழமை (டிச.14) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.