சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாட்டிற்கு வரலாம் - தலைவர்களின் கருத்துகள்

ஸ்டாலின், கனிமொழி, கமல்ஹாசன், மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு

ஸ்டாலின், கனிமொழி, கமல்ஹாசன், மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today

Tamil Nadu News Today

சபரிமலை தீர்ப்பு : இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், ஆர்.எஃப். நரிமன் மற்றும் ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் பெண்களை கேரளா சபரிமலை ஆலயத்திற்குள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பினை வழங்கினார்கள்.  நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்.

Advertisment

இந்த தீர்ப்பிற்கு பலதரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருக்கார்.

சபரிமலை தீர்ப்பு : அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்து

Advertisment
Advertisements

திமுக எம்.பி.கனிமொழி கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும் என்று ட்வீட் செய்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தன்னுடைய முகநூலில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார். அதில் வழிபடும் உரிமை மட்டும்மல்லாது அர்ச்சனை செய்யும் உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தன்னுடைய ட்விட்டர் பகுதியில் இந்த தீர்ப்பினை வரவேற்பதாக கருத்து தெரிவித்திருக்கிகிறார்.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குறித்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சபரி மலை கோவிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பினை வரவேற்பதாக மதுரை ஆதினம் குறிப்பிட்டிருக்கிறார்.

Sabarimala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: