சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் ஜக்கி வாசுதேவை அழைத்து மோடி நலம் விசாரித்து உள்ளார். இதை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்குரு ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஜக்கி வாசுதேவ் வெளியிட்ட வீடியோவில், அவர் நலமாக இருப்பதாகவும், கூடிய விரைவில் குணமாகிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி ஜக்கி வாசுதேவுக்கு அழைத்து பேசியுள்ளார். மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும். மற்றும் நல்ல ஆரோக்கியத்தை பெற வேண்டும் என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.