New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/21/fCRh0ccx5OK4VmcZXLi8.jpg)
திருச்சியில் பிரபல சமூக ஆர்வலர் டி.எஸ்.பி என்கிற டாக்டர் டி. சீனிவாச பிரசாத் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வலியுறுத்தி திருச்சியில் இருந்து திருப்பூர் வரை தனது இருசக்கர வாகனத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இந்த பிரச்சாரமானது திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள தீயணைப்பு அலுவலகத்திலிருந்து துவக்கி வைக்கப்பட்டது. இது திருச்சி, கரூர், வெள்ளகோவில், காங்கேயம் வழியாக திருப்பூர் சென்றடைந்தார். அங்கு திருப்பூர் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டு மீண்டும் திருச்சியில் முடிவடையும் என அறிவித்துள்ளார்.
இந்த தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் முனைவர் மோகன் ராம் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் திருச்சியின் பிரபல சமூக செயற்பாட்டாளர்களான ஜி. கோவிந்தசாமி, சாலை பாதுகாப்பு குழு உறுப்பினரான ஏர்போர்ட் கோவிந்தராஜ், பிரபல யோகா மாஸ்டர் விஜயக்குமார், ஒயிட் ரோஸ் பொது நலசங்கத்தின் தலைவர் சங்கர், கவிஞர் - வேலூர் சங்கமித்ரா - குழுவினர், நடிகரும் தேசிய அளவில் பல விருதுகளை பெற்றவருமான ஆர்.ஏ. தாமஸ் முன்னிலை வகுத்து துவக்கி வைத்தனர்.
மேலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திருச்சி மாவட்ட தீ தடுப்பு மீட்புத்துறை நிலைய அலுவலர் சுரேஷ், சிறப்பு நிலை அலுவலர் முத்துகிருஷ்ணன் உட்பட ஏராளமான தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டு தீத்தடுப்பு மற்றும் தீ பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி இந்த பேரணியை வாழ்த்தி துவக்கி வைத்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.