/indian-express-tamil/media/media_files/4JczQPIJJTpwghXw93ia.jpg)
"மத்திய அரசு நிதி வழங்காத போது மாநில அரசு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்குகிறது" என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் (எஸ்.எஸ்.ஏ) பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் விடுவிக்கப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, செப்டம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் கோரிக்கை வைத்தனர்
இந்நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எஸ்.எஸ்.ஏ.ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
"ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி வேண்டும். மத்திய கல்வி அமைச்சரிடம் 2 முறை கோரிக்கை வைத்தும், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதி இதுவரையில் வரவில்லை. மாநில அரசு நிதியில் இருந்து நிதியை எவ்வாறு பகிர்ந்து அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம்.
மேலும், தமிழ்நாடு முழுக்க 32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு நிதி வழங்காத போது மாநில அரசு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்குகிறது" என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.