ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை

"பண்ணை பசுமை கடைகளில் ரூ.60 என்ற அளவில் தான் பொதுமக்களுக்கு தக்காளி விநியோகிக்கப்படுகிறது" - அமைச்சர் பெரியகருப்பன்

"பண்ணை பசுமை கடைகளில் ரூ.60 என்ற அளவில் தான் பொதுமக்களுக்கு தக்காளி விநியோகிக்கப்படுகிறது" - அமைச்சர் பெரியகருப்பன்

author-image
WebDesk
New Update
Minister Periyakaruppan

தமிழகத்தில் தக்காளி விலை ரூ.140-ஐ எட்டிய நிலையில், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்தினார்.

Advertisment

இதைப்பற்றி, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், "கடந்த பத்து தினங்களாக தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அனைத்து குடும்பங்களிலும் பயன்படுத்தக்கூடிய உணவு பொருளான தக்காளியின் விலை உயர்வாக இருப்பதை மக்கள் சுட்டிக்காட்டினார்கள்.

அதன் அடிப்படையில், உயர்ந்த விலையை குறைப்பதற்கும் மேலும் அந்த விலையேற்றம் இல்லாமல் இருப்பதற்கும், ஆக்கபூர்வமான பணிகளை வல்லுனர்களோடு கலந்து பேசி, உரிய நடவடிக்கைகளை முதலமைச்சருடைய ஆலோசனை பெற்று செயல்படுத்தி வருகிறோம்.

ஏற்கனவே, ஐந்து தினங்களுக்கு முன்பு, இதுபோன்ற ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்தி, அந்த ஆய்வு கூட்டத்தின் அடிப்படையில் ஏறுகின்ற விலையை எப்படி ஏறாமல் நிறுத்துவது என்றும், அதைபோல் அதை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்களுக்கு, அதனுடைய விலையேற்றத்தை பாதிப்புகள் இருந்துவிட கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பண்ணை பசுமை கடைகள் மூலமாக 62 கடைகளிலும், வழக்கத்தை விட கூடுதலாக அதிகரித்து அதன் மூலமாக மக்களுக்கு வழங்குவது என்றும் எடுத்து கூறினோம். அதனடிப்படையில், இப்பொழுது தொடர்ந்து பண்ணை பசுமை கடைகளில் ரூ.60 என்ற அளவில் தான் பொதுமக்களுக்கு தக்காளி விநியோகிக்கப்படுகிறது.

Advertisment
Advertisements

அதே நேரத்தில், சில்லறை வியாபாரிகள் வெளிச்சந்தைகளில் சற்று கூடுதலாக விலை வைத்து விற்பதை உணர முடிகிறது.

ஆகவே, இன்னும் இந்த விலை ஏற்றத்தை ஏறாமல் தடுப்பதற்கு, அதிகரித்த விலையை குறைப்பதற்கான வழிமுறைகளை எங்கள் துறை ரீதியாகவும், உற்பத்தி செய்கின்ற விவசாய மக்களிடமும் கலந்துரையாடி இருக்கிறோம்.

தொடர்ந்து அதை வாங்கி மொத்த விற்பனை செய்யக்கூடிய வணிகர்கள் இடத்திலும் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறோம். 10 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் சாத்தியங்கள் இருக்கிறது ஆனாலும், வணிகர்கள் தருகின்ற ஒத்துழைப்பின் அடிப்படையில், விலையேற்றம் இனி இன்னும் கூடாமல் இருப்பதற்கான வழிவகைகளை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம்", என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: