Advertisment

சேலம் காவிரி ஆற்றில் மூழ்கி 4 கல்லூரி மாணவர்கள் மாயம்; ஒருவர் மரணம்

சேலம் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் மாயமாகியுள்ள நிலையில், அதில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்

author-image
WebDesk
New Update
death

டி.வி சேனல் டிரைவர் சென்னை பிரஸ் கிளப்பில் மரணம்

சேலம் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 4 கல்லூரி மாணவர்கள் நீருக்குள் மூழ்கி மாயமாகியுள்ள நிலையில், அதில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதையும் படியுங்கள்: மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ: 2-வது நாளாக தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர்

சேலம் மாவட்டம் கல்வடங்கம் பகுதியில் காவிரி ஆற்றிற்கு எடப்பாடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள், மேட்டூர் அரசு கல்லூரியை சேர்ந்த 2 மாணவர்கள் என மொத்தம் 10 பேர் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது 4 கல்லூரி மாணவர்கள் நீருக்குள் மூழ்கி மாயமாகியுள்ளனர்.

இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் நீரில் மூழ்கிய மாணவர்களை தேடி வருகின்றனர். இந்தநிலையில், ஒரு மாணவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. மற்ற 3 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Salem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment