/indian-express-tamil/media/media_files/RddYXROiRb0wf5ltyLH7.jpg)
சௌமியா அன்புமணி, மகள் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்து; அ.தி.மு.க பிரமுகரை கைது செய்த சேலம் போலீஸ்
சௌமியா அன்புமணி மற்றும் பெண்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட அ.தி.மு.க பிரமுகரை சேலம் போலீசார் கைது செய்தனர். அவரை விடுவிக்க கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் அ.தி.மு.க.,வில் உறுப்பினராக இருந்து வருகிறார். அருண்குமார் தனது முகநூல் பக்கத்தில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிடும் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி குறித்து பல்வேறு பதிவுகளையும், அவருக்காக அவரது மகள்கள் பிரச்சாரம் செய்து குறித்து சர்ச்சையான கருத்துக்களையும் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஓமலூர் போலீசார் அருண்குமாரைக் கைது செய்தனர். இதையறிந்த அ.தி.மு.க.,வினர் பா.ம.க.,வினரும் ஆபாசமாக பதிவிட்டுள்ளதாக கூறினர்.
இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தெய்வானை தலைமையில் 50 மேற்பட்ட வி.சி.க.,வினர் அருண்குமாரை விடுவிக்கக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், சமூகவலைதளங்களில் போடும் பதிவுகளுக்கு எல்லாம் கைது செய்வீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.