Advertisment

சமயபுரத்தில் 15 பேரிடம் செல் போன் பறிப்பு: 12 பவுன் தங்க நகைகள் மிஸ்ஸிங்

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் சுமார் 15 பேரிடம் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
Samayapuram cart

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி நடைபெற்றது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Advertisment

இந்நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் சுமார் 15 பேரிடம் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும், நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் (55) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

இதேபோல், சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியை சேர்ந்த லட்சுமியிடம் (60) இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளி கைச்செயின் திருட்டு போனது. மேலும் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஓமாந்தூர் கீழப்பட்டியை சேர்ந்த செண்பகவல்லி (60) என்பவர் அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலி திருட்டு போனது.

மேலும், சில பெண்களிடமும் சங்கிலி பறிப்பு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 16-ந்தேதி சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment