சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த ஜெகன்நாதன் எனப்வர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றது அரசமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும். சனாதன ஒழுப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“