மணல் கடத்தல் வழக்குகளில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக வரும் செவ்வாய்க் கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறினால் டி.ஜி.பி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை.
மணல் கடத்தில் வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம் துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாபு என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி வேதியம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ராமதிலகம் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சாதராண பொது மக்கள் மீது இது போன்று பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறன்றன. ஆனால் லஞ்சம் பெற்றுக் கொண்டு இதை அனுமதிக்கும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் இது தொடர்பாக வரும் 8 ஆம் தேதிக்குள் தமிழக அரசும், காவல் துறையும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், விசாரணை வரும் செவ்வாய்க் கிழமை தள்ளிவைத்தனர்.