/tamil-ie/media/media_files/uploads/2023/08/Sandalwood1.png)
கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக்கட்டைகள்
கோவை போத்தனூர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது, கர்நாடக பதிவு எண் கொண்ட லாரி ஒன்று வந்துள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் லாரியை நிறுத்த போலீசார் முற்பட்ட போது லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து போத்தனூர் காவல்துறையினர் லாரியை பின்தொடர்ந்து சென்று மடக்கி நிறுத்தி உள்ளனர்.
கோவையில் சந்தன கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது#Coimbatore / #Crimepic.twitter.com/gfWZcDIcO9
— Indian Express Tamil (@IeTamil) August 1, 2023
பின்னர் லாரிய சோதனையிட்ட போது அதில் மூட்டை மூட்டையாக சந்தன கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டுநர் மனோஜை பிடித்த போலிசார், லாரியை மாவட்ட வன அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
இது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டதில், அவை கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து சென்னைக்கு எடுத்து செல்லப்படுவது தெரியவந்தது.
இதில் 57 மூட்டைகளில் இருந்து 1051 கிலோ சந்தன கட்டைகள் பிடிப்பட்டுள்ளன.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.