தமிழை விட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி: 17 மடங்கு கூடுதல் ஒதுக்கீட்டால் சர்ச்சை

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.2532.59 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது ஆர்.டி.ஐ. தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.2532.59 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது ஆர்.டி.ஐ. தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
tamil

மத்திய அரசு 2014 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ₹2532.59 கோடி (ஆண்டுக்கு ₹230 கோடி) ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கு ₹147.56 கோடி (ஆண்டுக்கு ₹13 கோடி) மட்டுமே ஒதுக்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.டி.ஐ (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) மூலம் வெளிவந்துள்ள இந்தத் தகவல், சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 17 மடங்கு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

Advertisment

இந்த நிதி ஒதுக்கீடு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "ஓட்டுக்கு தமிழ்; நோட்டுக்கு சமஸ்கிருதம்" என்று பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். "தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜகவுக்கு ஓட்டுக்கு மட்டும்தான்; நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்குத்தான்" என்று அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

அதேபோல், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளைப் புறக்கணித்து சமஸ்கிருதத்திற்கு அளவுக்கு அதிகமான நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசை விமர்சித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ₹2532 கோடி ஒதுக்கப்பட்டது, மற்ற ஐந்து செம்மொழிகளுக்குச் சேர்த்து ஒதுக்கப்பட்ட ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

Tamil Sanskrit

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: