Advertisment

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்; கொலை வழக்காக மாற்றம்; எஸ்.ஐ கைது

சாத்தான்குளம் தந்தை மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய உதவி காவல் ஆய்வாளார் ரகு கணேஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today : காவலர் முத்துராஜ் கைது, ரேவதி 5 மணி நேரம் வாக்குமூலம்: சாத்தான்குளம் அப்டேட்

சாத்தான்குளம் தந்தை மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய உதவி காவல் ஆய்வாளார் ரகு கணேஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், போலீசார் சித்திரவதையால் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. தந்தை மகன் மரணம் சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரை பணி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் வணிகர் சங்கங்கள் போராட்டம் நடத்தினர்.

தந்தை மகன் மர்ம மரணம் சம்பவத்துக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின், வைகோ, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழக அரசும் இந்த வழக்கில் தொடர்புடைய காவலர்களை பணியிடை நீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலையம் சென்று விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதனிடையே, சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை விசாரித்த சிபிசிஐடி ஐடி சங்கர், இந்த வழக்கில் இன்றே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை திருத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீசாரை அடித்து சித்திரவதை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல்நிலைய எஸ்.ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலில் இந்த வழக்கில் காவலில் உயிரிழப்பு என்றிருந்ததை சிபிசிஐடி போலீசார் பிரிவு 302-ன் கீழ் கொலைவழக்காக பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான 2 முதல் தகவல் அறிக்கைகளிலும் கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணனும் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்த வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்டுள்ளதோடு உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டிருப்பது முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Tamil Nadu Tuticorin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment