சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ அதிகாரிகள் இன்று ஜெயராஜ் வீடு மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பென்னிக்சின் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சம்பவத்தன்று நடந்த காட்சிகளை சொல்லவைத்து வீடியோ பதிவு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த மாதம் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் போலீஸ் சித்ரவதையால் மரணமடைந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து நடந்த போராட்டம், உலக அளவில் கவனத்தைப் ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்ததில் 10 போலீசார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே சாத்தான்குளம் வழக்கு சிபிஐ விசாணைக்கு மாற்றப்பட்டது. நேற்று சிறப்பு விமான மூலம் டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள் இன்று சாத்தான்குளம் சென்று ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் அவர்களை மருத்துவ சான்றிதழுக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், சிபிஐ அதிகாரிகள் பென்னிக்ஸின் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சம்பவத்தன்று நடைந்த காட்சிகளை சொல்ல வைத்து வீடியோ பதிவு செய்தனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் சிபிஐ அதிகாரிகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு, மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை சூடுபிடித்திருக்கிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Sathankulam father son death cbi investigation at hospital and jeyaraj bennix house
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!