சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் துணை ஆய்வாளர்கள், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், காவல்துறை குறித்து நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
28, 2020
அந்த வீடியோவில் அவர், "இதுவரை நிறைய படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், அப்படி நடித்ததை நினைத்து இப்போது வெட்கப்படுகிறேன். இனி நானும் அப்படி நடிக்க மாட்டேன். என் பிள்ளையாய் இருந்தால் கூட போலீஸ் கேரக்டரில் நடிக்க விட மாட்டேன்" என்று மிக காட்டமாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”